"அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்"- திருமண வதந்திக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம்

"அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்"- திருமண வதந்திக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம்
Updated on
1 min read

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கில் 'போலா ஷங்கர்', தமிழில் 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை கீர்த்தி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக கீர்த்தியின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கீர்த்தியும் ஃபர்ஹானும் நல்ல நண்பர்கள். ஃபர்ஹானுக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதை தவறாக பரப்பிவிட்டார்கள். இந்த தகவல்கள் அனைத்தும் தவறு. இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கண்டிப்பாக நானே முதலில் அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அன்பான நண்பரை இந்த நேரத்தில் தேவையற்ற வதந்திகளில் இழுக்க வேண்டாம். நான் திருமணம் செய்யப்போகும் நபரை நானே அறிவிப்பேன். அதுவரை கொஞ்சம் பொறுமை காத்திருங்கள். ஆனால், நான் யாரையும் இதுவரை தேர்வு செய்யவில்லை" என்று பதிவிட்டு இருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in