ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்

ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை வசந்தா காலமானார்
Updated on
1 min read

‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாகவும், ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிக்கு தாயாகவும் நடித்த பழம்பெரும் நடிகை வி.வசந்தா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

எம்.கே.தியாகராஜா பாகவரது நாடக குழுவில் இடம் பெற்ற பழம் பெரும் நடிகை வி.வசந்தா. நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்த இவர், ‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும், ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார்.

மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் இன்று மதியம் 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். நாளை (மே-20) பிற்பகல் 1:30 மணி அளவில் இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. திரை உலகை சேர்ந்தவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in