ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் ‘சித்தார்த்’

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் ‘சித்தார்த்’
Updated on
1 min read

‘பன்றிக்கு நன்றி சொல்லி’,‘பருந்தாகிறது ஊர்க் குருவி’ படங்களில் நாயகனாக நடித்தவர் நிஷாந்த் ரூஸோ. இவர் இப்போது நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘சித்தார்த்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக புதுமுகம் ராஷ் நடிக்கிறார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜூட் ரொமாரிக் இயக்குகிறார். லோகநாத் சஞ்சய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜேடி இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “இது ஆக்‌ஷன் திரில்லர் படம். ஆசையே அழிவுக்கு காரணம், விழிப்புணர்வு பெறுதல் , அறிதல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in