

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தானடி' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு.
இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். டிசம்பர் முதல் வாரத்தில் ஹைதரபாத்தில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை க்ளோ ஸ்டூடியோஸ் மற்றும் சுசாந்த் பிரசாத் தயாரித்து வருகிறது.
'மன்னவன் வந்தானடி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காதல் சார்ந்த கதை களம் கொண்ட படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பதால், இப்படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.