மருத்துவமனையில் மிரள் இயக்குநர் அனுமதி

மருத்துவமனையில் மிரள் இயக்குநர் அனுமதி

Published on

பரத், வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், ‘மிரள்’. இதை சக்திவேல் இயக்கி இருந்தார். இவர், சென்னை அருகே துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டு ஓடியது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கிறார்.

இதுபற்றி சக்திவேலிடம் கேட்டபோது, “விஷப் பாம்பு கடித்ததும் உடனடியாக மருத்துவமனை சென்றுவிட்டேன். சிகிச்சைக்குப் பின் இப்போது நலமாக இருக்கிறேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in