விரைவில் ‘சர்தார் 2-ம் பாகம்’ உருவாகும் - கார்த்தி அறிவிப்பு

கார்த்தி
கார்த்தி
Updated on
1 min read

‘சர்தார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'. தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தண்ணீர் மாஃபியா குறித்தும், உளவாளியின் வாழ்க்கை குறித்தும் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 5 நாட்களில் படம் ரூ.50 கோடி வசூலை ஈட்டியுள்ள நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கார்த்தி, 'சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் உருவாகத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in