நிரந்தர நீக்கத்தை எதிர்த்து சரத்குமார், ராதாரவி: புதிய மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

நிரந்தர நீக்கத்தை எதிர்த்து சரத்குமார், ராதாரவி: புதிய மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தர மாக நீ்க்கப்பட்டதை எதிர்த்து நடிகர்கள் சரத்குமார், ராதாரவி புதிதாக மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2015 அக்டோபரில் நடந்தது. இதில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், நடிகர் சங்க அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சரத்குமாரும், ராதா ரவியும் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. நடிகர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி தற்காலிகமாகத்தான் நீக்கப்பட்டிருந்தனர். கடந்த 27-ம் தேதி நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இவர்கள் இருவரையும் நிரந்தரமாக சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இடைநீக்க உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காலாவதி யாகிவிட்டது’’ என்று வாதிட்டார்.

சரத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இடைநீக்கத்தை எதிர்த்து ஏற்கெனவே தொடரப் பட்ட வழக்கு நிலுவையில் இருக் கும்போதுதான், நிரந்தரமாகவும் நீக்கியுள்ளனர். எனவே, இந்த வழக்கிலேயே உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ‘‘சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு, இடைநீக்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது. எனவே, தங்களை நிரந்தரமாக நீக்கி தென்னிந்திய நடிகர் சங்கம் பிறப்பித்துள்ள உத்த ரவை எதிர்த்து சரத்குமார், ராதா ரவி ஆகியோர் புதிதாக மனுதாக் கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in