பொன்னியில் செல்வன் படத்தில் நடிக்காததற்காக வருந்தவில்லை: அமலா பால்

பொன்னியில் செல்வன் படத்தில் நடிக்காததற்காக வருந்தவில்லை: அமலா பால்
Updated on
1 min read

‘பொன்னியில் செல்வன்’ படத்தில் நடிக்காததற்காக வருந்தவில்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார்.

நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.

பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. தெலுங்கு சினிமாவில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்றும் கேட்கிறார்கள்.

அங்கு சினிமா குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் ஆதிக்கம் இருந்தது. ஒவ்வொரு படத்திலும் 2 நாயகிகள் இருப்பார்கள். காதல் காட்சிகள், பாடல்கள் எல்லாமே கவர்ச்சியாகவே இருக்கும்.

கமர்சியல் படங்களாகவே இருந்தன. அதனால் அங்கு குறைவான படங்களிலேயே நடித்தேன். இவ்வாறு அமலா பால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in