கைவிடப்பட்ட பாபி சிம்ஹா படப் பணிகள் மீண்டும் துவக்கம்

கைவிடப்பட்ட பாபி சிம்ஹா படப் பணிகள் மீண்டும் துவக்கம்
Updated on
1 min read

பாபி சிம்ஹா நடிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'பாம்பு சட்டை' படத்தின் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு உள்ளிட்ட பலர் நடிப்பில் துவங்கப்பட்ட படம் 'பாம்பு சட்டை'. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்துக்கு அஜிஷ் இசையமைத்து வந்தார். மனோபாலா, ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து இப்படத்தை தயாரித்து வந்தார்கள்.

தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் உரிமையை பிரபல விநியோகஸ்தர் கங்காதரன் வாங்கி இருக்கிறார். இதனால் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்க இருக்கிறது படக்குழு.

இப்படத்தை குறித்து கங்காதரன், "நான் பார்த்த சில காட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. கால தாமதம் இந்த படத்தின் தரத்தை சற்றும் குறைக்கவில்லை. ரசிகர்களின் ரசனைகளை நன்கு அறிந்தவர் தயாரிப்பாளர் மனோ பாலா சார். நிச்சயமாக அவர் தேர்வு செய்திருக்கும் இந்த திரைப்படம் வர்த்தக ரீதியாக அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

'பாம்பு சட்டை' படத்தை நாங்கள் மற்றும் அபி & அபி நிறுவனத்தின் அபினேஷ் இளங்கோவனுடன் இணைந்து வெளியிட இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in