Published : 16 Aug 2022 01:43 AM
Last Updated : 16 Aug 2022 01:43 AM

திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்

சென்னை: பிரபல தமிழ் சினிமா விமர்சகர் மற்றும் தொகுப்பாளர் கௌசிக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தனியார் ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த கௌசிக் சினிமா விமர்சகராகவும், சினிமா டிராக்கராகவும் அறியப்பட்டுவந்தார். ட்விட்டர் போன்ற வலைதளங்கள் மூலம் சினிமா தொடர்பான தகவல்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்தார். இதனிடையே, நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் ஊடக துறையிலும் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதாரி, வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் படித்துள்ள கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார். இதனிடையே, நேற்று திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்துள்ளார் கௌசிக். இதற்கான நண்பர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், படுக்கையில் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்த செய்தி தான் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x