தயாராகிறதா யாமிருக்க பயமே இரண்டாம் பாகம்?

தயாராகிறதா யாமிருக்க பயமே இரண்டாம் பாகம்?
Updated on
1 min read

'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே அப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியிருக்கிறார்.

வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் படம் 'யாமிருக்க பயமே'. சென்சாரில் U/A சான்றிதம் பெற்றிருந்தது. அப்படம் U சான்றிதழ் வாங்கியிருந்தால், இன்னும் நிறைய பேர் பார்த்திருப்பார்கள் என்றும், இந்தாண்டின் மாபெரும் வசூல் செய்த படம் என்ற சாதனை எட்டியிருக்கும் என்றும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் அப்படத்தினை தயாரித்த எல்ரெட் குமார், மீண்டும் தனது நிறுவனத்திற்கு படம் இயக்கும்படி இயக்குநர் டி.கேவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அப்படம் கண்டிப்பாக 'யாமிருக்க பயமே' இரண்டாம் பாகம் தான் என்று செய்திகள் வெளியாகின.

"'யாமிருக்க பயமே' படத்தின் இரண்டாம் பாகம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால் அது எனது அடுத்த படமாக இருக்குமா என்று முடிவு செய்யவில்லை. தற்போது எனது அடுத்த படத்திற்கான கதையினை எழுதி வருகிறேன். அக்கதையினை எழுதி முடிக்கும் போது அது 'யாமிருக்க பயமே' படத்தின் இரண்டாம் பாகமா இருக்குமா என்று தெரிய வரும்." என்று கூறியிருக்கிறார் இயக்குநர் டி.கே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in