Published : 25 Apr 2022 01:36 PM
Last Updated : 25 Apr 2022 01:36 PM

'தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா என நாசர் சார் கேட்டார்' -  நடிகர் ஜீவா பேச்சு 

சென்னை: "தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா? ஏன் நடிக்க வந்தீர்கள்? என்றும் நாசர் சார் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை'' என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை. மேடையில் இருக்கும் அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன். எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. 'காக்க காக்க' படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.

மேடையில் நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததையே மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். அவர் தான் எனக்கு வழிகாட்டி. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார். அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாக தான் அறிமுகமானேன். அவர் என்னைப் பார்த்து "தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்து விடுவாயா? என்று வினவியதோடு, நான் ஏன் நடிக்க வந்தேன்” என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள் வரை பதில் இல்லை.

நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார் தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்குக் கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வதை ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.

உத்வேகத்துடன் இருங்கள். பலரை ஊக்குவியுங்கள், நன்றாக இருங்கள், என்னிடம் வாழ்க்கைக்கான பல மேற்கோள்கள் உள்ளன. அவற்றில் எனக்கு பிடித்த இரண்டினை படிக்கிறேன். "THERE IS NO COMPETITION, THAT IS A VIEW" இதுதான் நான் பின்பற்றும் மந்திரம். மற்றொன்று "USE YOUR ENERGY TO CREATE, NOT TO DESTROY". இறுதியாக "STOP TRYING TO BE LIKED BY EVERYBODY, EVEN YOU DONT LIKE EVERYBODY. "

உங்களிடம் பணம் இருக்கிறது, உங்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், நான் நினைக்கக் கூடிய மிகவும் மதிப்புமிக்க விஷயம் ஆற்றல். சிறந்த ஆற்றல் உள்ளவர் எதையும் சாதிக்க முடியும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. கிரிக்கட் வீரர் சச்சின் சார் சொல்வது போல், என்னுடைய சிறந்த படங்கள் இன்னும் வரவிருக்கின்றன. முந்தைய படங்களை விட வரவிருக்கும் படங்களில் உங்களை மேலும் மகிழ்விக்கவுள்ளேன். அதற்கும் உங்களின் ஆதரவு தேவை. நன்றி என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x