சிம்புவிடம் எந்த ஒளிவுமறைவும் கிடையாது - நண்பர் மஹத் ராகவேந்திரா பகிர்வு

சிம்புவிடம் எந்த ஒளிவுமறைவும் கிடையாது - நண்பர் மஹத் ராகவேந்திரா பகிர்வு
Updated on
1 min read

சிம்புவிடம் எந்த ஒளிவுமறைவும் கிடையாது என நடிகர் மஹத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.

நடிகர் சிலம்பரசன் நேற்று (ஜன 04) தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைதளங்கலில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். சிம்புவின் நெருங்கிய நண்பரும், நடிகருமான மஹத் ராகவேந்திரா ‘வல்லவன்’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு மஹத் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு குறித்து பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

“சிம்புவிடம் எந்த ஒளிவுமறைவும் கிடையாது. அவர் ஒரு வெளிப்படையான நபர். திரைக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி மனதில் பட்டதை பேசக் கூடியவர். அடுத்தவர்களின் கருத்து பற்றி சிம்பு எப்போதும் கவலைப்படுவதில்லை. தன்னுடைய சொந்த வழியில் அவர் தன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருடைய அனைத்து வெற்றிக்கும் அவர் மட்டுமே காரணம். சிம்பு பலருக்கும் உத்வேகமாக இருப்பதைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்”

இவ்வாறு மஹத் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in