

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'பிச்சைக்காரன்' படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருப்பதால் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்திருக்கும் இப்படத்தை கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படம் முதலில் 260 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வரவேற்பு இருப்பதால, தற்போது 350 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும், முதல் 3 நாட்களில் இப்படம் 4.2 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அரசாங்கம் இப்படத்துக்கு வரிச்சலுகை அளித்திருப்பது இப்படத்துக்கு கூடுதல் பலம்.
பரீட்சை நேரம் என்பதால் எப்போதுமே படங்களின் வசூல் கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும். 'பிச்சைக்காரன்' அதனை முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.