புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா
Updated on
1 min read

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் நேற்று (அக்டோபர் 29) மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார்.
மோட்ச தீபம் ஏற்றிய பின்னர் அவர் புனித் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும் என்று மூன்று முறை கூறினார்.

இந்த வீடியோ அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவுடன், அன்பர் புனித் ராஜ்குமாரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தக் கடினமான காலகட்டத்தில் அவரது குடும்பத்தாருக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in