Last Updated : 10 Mar, 2016 03:16 PM

 

Published : 10 Mar 2016 03:16 PM
Last Updated : 10 Mar 2016 03:16 PM

கார்த்தியின் காஷ்மோராவில் போர்க் காட்சி படப்பிடிப்பு தீவிரம்

கார்த்தி நடித்து வரும் 'காஷ்மோரா' படத்துக்காக பிரம்மாண்டமான போர் சண்டைக் காட்சியை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கத்தில் 'காஷ்மோரா' படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கார்த்தி.

நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

'காஷ்மோரா' படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தையுமே சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான அரங்கில் தான் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் காட்சிகளை சுமார் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கார்த்தி 3 கெட்டப்களில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஆதித்யாராம் ஸ்டூடியோவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மாண்டமான போர்க் காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதற்காக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பல கேமராக்களை வைத்து காட்சிப்படுத்தி வருகிறார்.

'காஷ்மோரா' படப்பிடிப்பை முடித்துவிட்டு, மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் கார்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x