நாயகனாக அறிமுகமாகும் 'கோமாளி' இயக்குநர்

நாயகனாக அறிமுகமாகும் 'கோமாளி' இயக்குநர்
Updated on
1 min read

'கோமாளி' இயக்குநர் ப்ரதீப் ரங்கநாதன் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தினை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.

'கோமாளி' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடைய படங்களை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், எதுவுமே இறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தற்போது ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் உறுதியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் அவரே நாயகனாக நடித்து இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in