சற்குணம் இயக்கத்தில் அதர்வா: பூஜையுடன் பணிகள் துவக்கம்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா: பூஜையுடன் பணிகள் துவக்கம்

Published on

சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டன.

'களவாணி 2' படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார். ஆனால், கரோனா அச்சுறுத்தலால், திட்டமிட்டபடி எதுவும் தொடங்கப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால், தற்போது சற்குணம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 22-வது படத்தை இயக்குகிறார் சற்குணம். இதில் அதர்வா, ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லோகநாதன், எடிட்டராக ராஜா முகமது உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.

ஒரே ஷெட்டியூலில் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் திருவையாறு சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்படவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in