முதல் பாகத்துக்கும் பார்ட் 2-க்கும் தொடர்பில்லை: அரண்மனை 2 படக்குழு

முதல் பாகத்துக்கும் பார்ட் 2-க்கும் தொடர்பில்லை: அரண்மனை 2 படக்குழு
Updated on
1 min read

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'அரண்மனை2' படத்துக்கும் 'அரண்மனை' படத்துக்கும் சம்பந்தமில்லை என்கிறது படக்குழு.

சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அரண்மனை 2'. குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின. படக்குழுவும் அதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், 'அரண்மனை' படத்தின் தொடர்ச்சியா 'அரண்மனை 2' என்று விசாரித்த போது, "'அரண்மனை' படத்தில் இடம்பெற்ற சுந்தர்.சி பாத்திரம் மட்டுமே இப்படத்தில் அப்படியே இடம்பெற்றிருக்கிறது. அதைத் தவிர, இரண்டு படங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இதை தனிக்கதையாக எழுதியிருக்கிறார் சுந்தர்.சி

மேலும், 'அரண்மனை' படத்தில் மனோபாலா மற்றும் கோவை சரளா இருவரும் கணவன் - மனைவியாக நடித்திருந்தார்கள். இப்படத்தில் இருவரும் அண்ணன் - தங்கையாக நடித்திருக்கிறார்கள். இப்போது இரண்டுமே வெவ்வேறு கதை என தெரிந்திருக்கும்.

மேலும், 'அரண்மனை' படத்தை விட 'அரண்மனை 2' பிரம்மாண்டமாகவும், ரசிகர்களை மேலும் திருப்திபடுத்தும் வகையிலும் இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in