Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

நயன்தாராவின் பாராட்டு

நயன்தாரா, ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனது பகுதிகளை முடித்துவிட்டு சொந்த ஊரான கொச்சிக்கு பறந்துவிட்டார். இதற்கிடையில், தமிழில் அவரது நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்கு தயாராகிவரும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் உட்பட முழு வேலைகளும் முடிந்தன.

இதையடுத்து, சமீபத்தில் ‘நெற்றிக்கண்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை பார்த்திருக்கிறார் நயன்தாரா. ஒவ்வொரு காட்சியும் அவருக்கு முழு திருப்தியை கொடுக்க, இயக்குநர் மிலின் ராய் உள்ளிட்ட படக் குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அந்த மகிழ்ச்சியில், அடுத்தடுத்த கதைகள் கேட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக, நாயகியை மையமாகக் கொண்ட கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் நயன்தாரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x