ஜி.வி.பிரகாஷ் படத்தில் ரீமிக்ஸ் ஆகிறது கண்ணை நம்பாதே பாடல்

ஜி.வி.பிரகாஷ் படத்தில் ரீமிக்ஸ் ஆகிறது கண்ணை நம்பாதே பாடல்

Published on

சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தில் 'கண்ணை நம்பாதே' பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறார்கள்.

'டார்லிங்' இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தை லைக்கா நிறுவனம் முன்வந்தது. ஆனந்தி, பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

'எனக்கு இன்னொரு பெயர் இருக்கு' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகும் முதல் பாடலாக, எம்.ஜி.ஆர் பாடலான 'கண்ணை நம்பாதே' பாடலை ரீமிக்ஸ் செய்ய இருக்கிறார்கள். 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணை நம்பாதே' பாடல் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகும்.

அப்பாடலை முறையாக அனுமதி வாங்கி ரீமிக்ஸ் செய்ய இருக்கிறோம் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in