Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

அம்மாவுடன் நயன்தாரா!

கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால், படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது தாயுடன் பொழுதை கழித்து வருகிறார் நயன்தாரா. இயற்கையான சூழல், வீட்டு சமையலால் உற்சாகத்தில் இருக்கும் அவர், புதிதாக 2 கதைகளையும் கேட்டு நடிக்க முடிவெடுத்துள்ளார். அவையும் ‘அறம்’, ‘ஐரா’, ‘டோரா’, ‘நெற்றிக்கண்’ பாணியில் நாயகியை மையமாகக் கொண்ட கதைகள் என்று தெரிகிறது. கரோனா தாக்கம் குறைந்ததும் மே மாத இறுதியில் அப்படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். அதுவரை கொச்சியில் டேரா என்பதில் தெளிவாக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x