காயத்தை பொருட்படுத்தாது படப்பிடிப்பை முடித்த அஜித்

காயத்தை பொருட்படுத்தாது படப்பிடிப்பை முடித்த அஜித்
Updated on
1 min read

'வேதாளம்' படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின் போது, காலில் அடிப்பட்ட போதும் முழு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் 'சிறுத்தை' சிவா. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு அக்டோபர் 15ம் தேதி நடைபெற்றது. அஜித் நடனமாடும் சில காட்சிகளை படமாக்கினார்கள். அப்போது அவருக்கு காலில் அடிபட்டது.

'ஆரம்பம்' படத்தின் போது காலில் அடிபட்டு, ப்ளேட் வைக்கப்பட்டது. அதே இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால் வலியால் துடித்தார் அஜித். படக்குழு உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்தது. இறுதிநாள் படப்பிடிப்பு நிறுத்த வேண்டாம், ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டு ஒய்வெடுத்திருக்கிறார்.

அதற்கு பிறகு, மீண்டும் கால் வலியோடு முழுப் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் அஜித். காலில் அடிபட்டதால், நேற்று 'வேதாளம்' படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

'வேதாளம்' படத்தின் முதல் பாதி டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் அஜித். இரண்டாம் பாதி டப்பிங் பணிகள் மட்டுமே பாக்கியிருக்கிறது. படம் தீபாவளிக்கு திரைக்கு வரவருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in