Published : 02 Oct 2020 07:05 AM
Last Updated : 02 Oct 2020 07:05 AM

மக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. நினைவிடம் திறப்பு

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் நேற்று திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 25-ம்தேதி காலமானார். அவரது உடல்,தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என, அவரது குடும்பத்தினரிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, அக்டோபர் 1, 2 ஆகிய நாட்கள் அஞ்சலி செலுத்த, அவரது குடும்பத்தினர் அனுமதியளித்துள்ளனர். ஆகவே, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணி முதல், மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் எஸ்பிபி நினைவிடத்தில் பொதுமக்கள் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x