கெளதம் மேனன் இயக்கத்தில் நிதின்

கெளதம் மேனன் இயக்கத்தில் நிதின்
Updated on
1 min read

'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து நிதின் நடிக்கும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்க இருக்கிறார் கெளதம் மேனன்.

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு டான் மேக்கார்தர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, துவங்கப்பட்டிருக்கிறது.

'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நிதின் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன். ஜனவரியில் தொடங்கவிருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாராக இருக்கிறது.

கெளதம் மேனன் தயாரித்திருக்கும் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'கொரியர் பாய் கல்யாண்' படத்தின் நாயகனாக நிதின் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in