வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்: நடிகர் கிருஷ்ணா மீது மனைவி புகார்

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்: நடிகர் கிருஷ்ணா மீது மனைவி புகார்
Updated on
1 min read

வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக நடிகர் கிருஷ்ணா மீது அவரது மனைவி ஹேமலதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

‘யட்சன்’, ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் எஸ்.கிருஷ்ணா (எ) கிருஷ்ணகுமார் (37). இவர் பிரபல திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர். கிருஷ்ணாவுக்கும் ஹேமலதா (29) என்பவருக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் வரதட் சணை கேட்டு தன்னை கொடுமைப் படுத்துவதாக கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலை யத்தில் ஹேமலதா புகார் அளித் துள்ளார். இந்த புகாரின் பேரில் நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து துடியலூர் போலீ ஸார் கூறியதாவது:

திருமணத்தின்போது ஹேம லதாவின் வீட்டார் 300 பவுன் நகைகளையும், ரூ.35 லட்சத்தையும் வரதட்சணையாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர். முதல் கட்டமாக 118 பவுன் நகைகளையும், ரூ.32 லட்சத்தையும் திருமணத்தின்போது கொடுத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் கிருஷ்ணா தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள வரதட்சணையை தருமாறு கேட்டு கிருஷ்ணாவும், அவரது பெற் றோரும் ஹேமலதாவுக்கு நெருக் கடி கொடுத்ததாகவும், அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹேமலதா சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். பின்னர் அவர் கோவையில் உள்ள தனது பெற் றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே நடிகர் கிருஷ்ணாவும், அவரது பெற்றோரும் ரூ.2 கோடியைத் தருமாறு கேட்டதாக வும் இல்லாவிட்டால் விவாகரத்து செய்ய உள்ளதாக மிரட்டியதாகவும் தனது புகாரில் ஹேமலதா கூறியுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அமுதா இதுபற்றி கூறும்போது, ‘ஏற்கெனவே ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸார் மூலம் முதற்கட்ட விசாரணை நடத்தப் பட்டது. ஆனால் அந்த விசார ணைக்கு நடிகர் கிருஷ்ணா ஒத்து ழைப்பு தரவில்லை. சமூக நலத்துறை மூலம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அவர் ஒத்து ழைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in