மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்

மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்
Updated on
1 min read

மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் பிரட்ரிக்

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது.

'பொன்மகள் வந்தாள்' படம் குறித்த விமர்சனங்கள் மற்றும் ஜோதிகாவின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில் இந்தப் படத்தில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலரும் இயக்குநர் பிரட்ரிக்கிடம் விளக்கம் கோரினார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரட்ரிக் வெளியிட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தில் பிரட்ரிக் கூறியிருப்பதாவது:

"AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்"

இவ்வாறு இயக்குநர் பிரட்ரிக் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in