கதை பிறந்த கதை: சிம்பு படம் குறித்து கௌதம் மேனன்

கதை பிறந்த கதை: சிம்பு படம் குறித்து கௌதம் மேனன்
Updated on
1 min read

கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியின் அடுத்த படம் காட்ஃபாதர் நாவலின் ஒரு பகுதியின் தழுவல் என இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' பட வெற்றிக்குப் பிறகு, கவுதம் மேனன், சிலம்பரசன் இணையும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் இத்திரைப்படத்தில், இரு மொழிகளிலும் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார். 75 சதவித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குநர், 'காட்ஃபாதர்' நாவலில் வரும் ஒரு வரி தான் இந்தப் படத்துக்கான அடிப்படை என்று கூறியுள்ளார்.

'காட்ஃபாதர்' உலகப் புகழ்பெற்ற நாவல். அதன் திரைப்பட வடிவமும் உலகம் முழுவதும் பிரசித்தம். 'நாயகன்', 'தேவர் மகன்', 'புதுப்பேட்டை', 'தலைவா', இந்தியில் 'சர்கார்' என ஏற்கனவே 'காட்ஃபாதர்' படத்தின் வெவ்வேறு வடிவங்களை இந்திய சினிமா கண்டுள்ளது. தற்போது அந்த பட்டியலில் 'அச்சம் என்பது மடமையடா' படமும் சேர்ந்துள்ளது.

படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில், நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in