Published : 15 Dec 2019 07:53 AM
Last Updated : 15 Dec 2019 07:53 AM

சென்னை தான்சேன் அகாடமி சார்பில் சிதார் மேதை ஷாகித் பர்வேஸ், ரமேஷ் விநாயகத்துக்கு விருது

தான்சேன் அகாடமி விருது விழாவில் உஸ்தாத் ஷாகித் பர்வேஸ் கான் (சிதார்) - பண்டிட் பாலேஷ், கிருஷ்ணா பாலேஷ் (ஷெனாய்) வழங்கிய ஜுகல்பந்தி.

சென்னையில் உள்ள பண்டிட் பாலேஷின் தான்சேன் அகாடமி சார்பில், இசை யில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின் றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கு்ம் விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது.

இதில், ஷெனாய் மேதை ‘பாரத ரத்னா’ பிஸ்மில்லா கான் - பண்டிட் சென்ன பரமன்னா நினைவு கலா ரத்னா விருது பிரபல சிதார் மேதை உஸ்தாத் ஷாகித் பர்வேஸ் கானுக்கு வழங்கப்பட்டது. இசை யமைப்பாளர் ரமேஷ் விநாயகம், `வீணை’ பார்த்தசாரதி ஆகியோ ருக்கு ‘கவுரவ் புரஸ்கார்’ விருதும், தபேலா கலைஞர் பிரசாத் லோஹருக்கு ‘யுவபுரஸ்கார்’ விருதும் வழங்கப்பட்டன.

பாரம்பரிய இந்துஸ்தானி இசை குடும்பத்தில் பிறந்தவர் உஸ்தாத் ஷாகித் பர்வேஸ் கான். எடாவா கரானா பாணி இசையை தன் தந்தை உஸ்தாத் அஸிஸ் கானிடம் கற்றார். பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாடமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

விழாவில், ஷெனாய் மேதை பண்டிட் பாலேஷுடன் இணைந்து ஷாகித் பர்வேஸ், ஜுகல்பந்தி இசையை வழங்கினார். பாலே ஷின் ஷெனாய், பனாரஸ் கரானா வில் கேள்வி எழுப்ப, அதற்கு ஷாகித்தின் சிதார் எடாவா கரானா வில் பதில் அளிக்க, இந்த வாத்திய உரையாடலுக்கு பக்கபல மாக கிருஷ்ணா பாலேஷின் ஷெனாயும், பிரசாத் லோஹரின் தபேலாவும் ஒலித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x