கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் மீண்டும் வைபவ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் மீண்டும் வைபவ்
Updated on
1 min read

'மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் வைபவ்.

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவுற்றுள்ளது. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தமிழகத்தில் நடத்த படக்குழு ஆயத்தமாகி வருகிறது. சஷிகாந்த் தயாரித்து வருகிறார்.

இதனிடையே ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளராகவும் படங்களைத் தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவான முதல் படமான 'மேயாத மான்' பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'பெண்குயின்' மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் புதிய படம் ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இதனைத் தொடர்ந்து தனது 4-வது தயாரிப்பை அறிவித்துள்ளார்.

இதில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் வீரப்பன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. காமெடி, ஆக்‌ஷன் மற்றும் டிராமா பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் நாயகியாக 'நட்பே துணை' படத்தில் நடித்த அனகா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரியும் இந்தப் படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in