Published : 06 Oct 2019 08:27 AM
Last Updated : 06 Oct 2019 08:27 AM

திரை விமர்சனம்: அசுரன்

சிவசாமி (தனுஷ்) குடும்பத்தின ரிடம் இருக்கும் சிறு நிலத்தை தன் தம்பி வெங்கடேசன் தொடங்கப்போகும் சிமென்ட் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சாதுவான சிவசாமியோ, அது அவரது மனை விக்கு அவளது அண்ணன் தந்த நிலம் என்பதால் விற்க மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரண மாக சிவசாமியின் மூத்த மகன் முரு கனை ஆள்வைத்துக் கொன்றுவிடு கிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாவது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), நரசிம்மனையே கொன்றுவிடுகி றான். இதனால் சிவசாமியின் குடும்பத்தையே அழிக்க நரசிம் மன் குடும்பம் அலைகிறது. அவர் களுக்கு பயந்து மனைவி பச்சை யம்மாளையும் (மஞ்சு வாரியர்), குழந்தையையும், மைத்துனரான முருகேசன் (பசுபதி) பொறுப் பில் விட்டுவிட்டு சிதம்பரத்துடன் காட்டுக்குள் நுழைகிறார் சிவசாமி. போலீஸாரும் கொலையாளியைத் தேடுகிறார்கள். சிவசாமி போலீஸி டம் மாட்டினாரா? தன் குடும் பத்தைக் காப்பாற்றினாரா என்ப தற்கு விடை சொல்கிறது ‘அசுரன்’.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ வரிசையில் 4-ம் முறையாக ‘அசுர’னில் இறங்கி அடித்திருக்கிறது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. 80-களில் தொடங் கும் கதை 60-களில் பின்னோக்கி பயணித்து மீண்டும் 80-க்குள் வந்து படத்தை நிறைவுசெய்திருக்கும் விதமும், ஒரு படத்துக்குள் இரு பீரியட் கதைகளைச் சொன்ன விதமும் ரசிக்கவைக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், அவர்களது சாதிய வன்மத்தையும் படம் உரக்கப் பேசியிருக்கிறது.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையா கக் கொண்டு, மணிமாறனும் வெற்றி மாறனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அடித்தட்டு மக்கள் பக்கம் நின்று அவர்களது நியா யத்தை துணிச்சலுடன் பேசியிருக் கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

சிவசாமி கதாபாத்திரத்தில் படத்தை முழுவதும் தாங்கிப் பிடிக் கிறார் தனுஷ். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலை வன், பிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளை ஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்கிறார். ஆரம்ப காட்சி களில் அவரது உடல்மொழியும் ஒப்பனையும், ஐம்பதைத் தொடும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாததுபோல் தோன்றினா லும், போகப் போக தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார் தனுஷ்.

மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் பொருந்துகிறது. குரலில்தான் வட்டாரத்துக்குப் பொருந்தாத அந்நியத் தன்மை! தனுஷின் மூத்த மகனாக டிஜே அரு ணாச்சலமும், தனுஷை கையாலா காத அப்பாவாக நினைக்கும் இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸும் கச்சிதமா கப் பொருந்தியுள்ளனர். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், பாலாஜி சக்தி வேல், பிரகாஷ்ராஜ் என எல்லோ ரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக் காட்டையும் கரிசல் பூமியையும் துல்லியமாகப் படம் பிடித்திருக் கிறது. காட்சிகளில் பயன்படுத்தப் பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரங்களின் மன நிலையை தத்ரூபமாகவே வெளிப் படுத்துகிறது ஒளிப்பதிவு.

‘‘அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு.. எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு..’’, ‘‘காடு இருந்தா எடுத்துக்கிடுவா னுவ.. ரூபா இருந்தா புடுங்கிக்கிடு வானுவ.. ஆனா, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது..’’ போன்ற வசனங்களி லும், பெண் குழந்தையைத் ‘தாய்’ என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்க வைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும், வெற்றிமாறனும்.

பாடல்களைவிட பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனம் ஈர்க்கிறார். காலகட்டத்தை சித்தரிப் பதில் கலை இயக்குநர் குறிப்பிடத் தக்க வகையில் பங்களித்துள்ளார்.

தவிர்க்கமுடியாத சூழலிலேயே சிவசாமி வன்முறையை தேர்ந் தெடுப்பதாகக் காண்பித்தாலும், வன்முறைக் காட்சிகள் படம் பிடிக் கப்பட்ட விதமும், திரைக்கதையில் அவை இடம்பெறும் விதமும் வன் முறையைக் கொண்டாடுவதாக அமைந்துவிடுகின்றன. கெட்ட வார்த்தைகளும் தாராளம்! இது போக இளைஞன் தலையில்லாமல் கிடக்கும் காட்சி, துண்டிக்கப்பட்டுக் கிடக்கும் கை..! (பெற்றோர் துணை யுடன் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கும் யு/ஏ சான்றிதழைத் தணிக்கை வாரியம் வழங்கியிருக்கிறது).

உறவுகளின் அன்பைச் சொல் லும் ஒரு நாவலை சினிமாத்தனத் துக்கு மாற்றியதில் இயக்குநர் வெற்றிமாறன் ஜெயித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணியக்கூட முடியாமல் இருந்த சாதிய ஒடுக்குமுறையையும், அந்த மக்களின் கண்ணீர்க் கதையையும் சரியாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கல்வி மட்டுமே அந்த மக்களுக்கு விடியல் தரும் என்பதையும் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், வழக்கமான சினிமா உத்திகளையே பின்பற்றிய வகை யில், வெற்றிமாறனும் சில ‘கிளிஷே’க்களுக்கு தப்பவில்லை. ஈட்டியில் ஒரே குத்தில் வில்லன் சாகி றான். நாயகனுக்கு நெஞ்சில் ஈட்டி பாய்ந்தாலும் உயிரோடு எழுந்து சரணடையப் போகிறான். பீரியட் படம் என்பதைக் காட்டுவதற்காக பழைய போன், சுவர் விளம்பரங் கள் என வழக்கமான உத்திகளையே காட்டுவதும் அலுப்பூட்டுகிறது.

அனைத்தையும் மீறி, ‘அசுரன்’ - வன்முறைக் கறைபடிந்த ஒடுக் கப்பட்டவர்களின் நாயகன்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x