Published : 18 Sep 2019 04:33 PM
Last Updated : 18 Sep 2019 04:33 PM

முடிவுகளை மாற்றும் நயன்தாரா? 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 19) காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெறவுள்ளது. இதற்காகப் படக்குழுவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த விழாவில் நயன்தாரா கலந்துகொள்ள உள்ளார்.

தான் நடித்த எந்தவொரு படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட எதிலும் கலந்துகொள்ள மாட்டார் நயன்தாரா. 'அறம்' படத்துக்கு மட்டும் படம் வெளியானதுடன் சில திரையரங்குகளுக்குச் சென்றார். அப்போதும் கூட எதுவும் பேசவில்லை.

'பிகில்' படம் பெரிய முதலீடு என்பதால் பல ஆண்டுகளாகத் தான் கடைபிடித்து வந்த கொள்கை முடிவுகளைக் கைவிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். மேலும், செப்டம்பர் 22-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள 'சைரா நரசிம்ம ரெட்டி' விழாவில் அவர் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறினார்கள். இந்த முடிவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

'பிகில்' மற்றும் 'சைரா' படத்தைத் தொடர்ந்து, 'நெற்றிக்கண்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. 'அவள்' இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x