Published : 15 Sep 2019 05:25 PM
Last Updated : 15 Sep 2019 05:25 PM

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படப்பிடிப்பு தொடக்கம்

மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள்'. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து 'அவள் 2' படத்தின் பணிகளைக் கவனித்து வந்தார். அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார். இதன் கதையைக் கேட்டுவிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனே தயாரிக்க முன்வந்தார். இதன் முதற்கட்டப் பணிகளான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று (செப்டம்பர் 15) முதல் சென்னையில் தொடங்கியுள்ளது படக்குழு. இதற்கு 'நெற்றிக்கண்' எனப் பெயரிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'நெற்றிக்கண்'. அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாகத் தலைப்புக்கு உரிமைப் பெற்று வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும் என்று இயக்குநர் மிலந்த் ராவ் தெரிவித்துள்ளார். 'ஐரா', 'மிஸ்டர் லோக்கல்', 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களின் தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் நயன்தாரா. அதற்குப் பிறகு மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x