Published : 14 Aug 2019 09:20 PM
Last Updated : 14 Aug 2019 09:20 PM

விஷால் - சுந்தர்.சி இணையும் ’ஆக்‌ஷன்’

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வந்த படத்துக்கு 'ஆக்‌ஷன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'அயோக்யா' படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷால். இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தது.

தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'ஆக்‌ஷன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைத்துள்ளனர்.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை மையப்படுத்தி தான் இந்தக் கதையை சுந்தர்.சி உருவாக்கியுள்ளார். அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் தான் துருக்கியில் காட்சிப்படுத்தியுள்ளார் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படங்களில் இது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x