முதல் முறையாக அதர்வாவுடன் இணையும் அனுபமா பரமேஸ்வரன்

முதல் முறையாக அதர்வாவுடன் இணையும் அனுபமா பரமேஸ்வரன்
Updated on
1 min read

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து மசாலா பிக்ஸ் தயாரிக்கும் படத்தை ஆர்.கண்ணன் எழுதி இயக்குகிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். 

சென்னையில் 15 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கியக் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கத் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் கண்ணன் கூறுகையில், "அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடி திரையில் நிறைய புத்துணர்ச்சியை தரும். அவர்கள் இருவரும் நிச்சயமாக பார்வையாளர்களை அவர்களின் உணர்வு வெளிப்பாடு மற்றும் அழகான செய்கைகளால் ரசிக்க வைப்பார்கள். 

ரொமான்டிக் படங்களுக்கு என்றே எப்போதும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் கடைசிக் கட்டத்தில் வெளியிடப்படவுள்ள இந்த பெயரிடப்படாத படம் அனைவராலும் ரசிக்கப்படும், குறிப்பாக குடும்பங்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in