Published : 21 Jul 2019 12:54 PM
Last Updated : 21 Jul 2019 12:54 PM
'அப்பா' படத்தைத் தொடர்ந்து, அதன் 2-ம் பாகத்தை உருவாக்க இயக்குநர் சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார்.
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அப்பா'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. குறைந்த முதலீடு என்பதால்,விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை முன்வைத்து இந்தப் படத்தை இயக்கி, நடித்திருந்தார் சமுத்திரக்கனி. தற்போது 'அப்பா' படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகளை முடித்துவிட்டார்.
'அப்பா 2' படத்தின் கதையை கல்லூரியில் நடக்கும் அவலங்களை முன்வைத்து உருவாக்கவுள்ளார். முதல் பாகம் போலவே 2-ம் பாகத்தையும் குறைந்த செலவிலேயே உருவாக்கவுள்ளார். 'நாடோடிகள் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகள் மற்றும் நடித்து வரும் படங்களின் பணிகளை முடித்துவிட்டு 'அப்பா 2'வில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சமுத்திரக்கனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT