Published : 20 Jul 2019 07:59 AM
Last Updated : 20 Jul 2019 07:59 AM

நானும் இப்போ நாயகி!

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாபாத்திரம் ஏற்று அனைவரது மனதிலும் இடம்பிடித்துள்ளவர் நடிகை சித்து.

‘‘ஏறக்குறைய 200 அத்தியாயங்கள் முடித்துவிட்டோம்.  விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சவால் விடும் அளவுக்கு தரவரிசையில் முன்னணியில் நிற்கும் தொடர். வில்லி, திருப்பம், சண்டை என ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு நடுவே, எதார்த்தம் மாறாமல், செயற்கைத்தனம் இல்லாமல்  கூட்டுக் குடும்ப உறவுகளைக் காட்டுவதாக ரசிகர்கள் இதை வெகுவாக பாராட்டுகின்றனர். இது எனக்கு 7-வது தொடர். ‘இதுபோன்ற மருமகள்தான் எங்களுக்கும் வேணும்’ என  இத்தொடரை பார்க்கும் பலரும் என் முல்லை கதாபாத்திரத்தை கொண்டாடுகின்றனர். சந்தோஷமா இருக்கு. சினிமா, சின்னத்திரையில் எல்லோருக்கும் ஒரு வசந்தகாலம் வரும். அது இப்போ எனக்கு வந்திருக்கு. இந்த தொடர் தந்த உற்சாகத்தில், அடுத்தடுத்து நாயகியை மையமாகக் கொண்ட 2 திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். இரண்டிலுமே கதாநாயகியாக நடிக்கிறேன். சென்னை, ஹைதராபாத் என படப்பிடிப்பு உற்சாகமாக நகர்கிறது’’ என்கிறார் சித்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x