ரூ.1 கோடி செலவில் பாஹூபலி இசை வெளியீட்டு நிகழ்ச்சி

ரூ.1 கோடி செலவில் பாஹூபலி இசை வெளியீட்டு நிகழ்ச்சி
Updated on
1 min read

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் ’பாஹூபலி’ படத்தின் இசை வெளியீடு ரூ.1 கோடி செலவில் மே 31-ஆம் தேதி ஹைதராபாதில் நடத்தப்படவுள்ளது. பிரபல தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் தயாராகிவரும் வரலாற்றுத் திரைப்படமான ’பாஹூபலி’ இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டில் படத்தின் முதல் ட்ரெய்லரும் வெளியிடப்படவுள்ளது.

ஆரம்பம் முதலே படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குநர் ராஜமவுலியின் திட்டமாக இருந்தது. அவ்வாறு திட்டமிட்டவாறே தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சுதீப், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள பாஹூபலியின் முதல் பாகம் இந்த வருடமும், இரண்டாம் பாகம் அடுத்த வருடமும் வெளியாகிறது.

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார், ஏற்கனவே படத்தின் இந்தி டப்பிங் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தககது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in