

சித்தார்த், த்ரிஷா இணைப்பில் 'அரண்மனை 2' படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி
வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் 'அரண்மனை'. இப்படம் வசூலில் பெரும் வரவேற்பை பெற்றது.
'அரண்மனை' படத்தைத் தொடர்ந்து 'ஆம்பள' படத்தை இயக்கினார் சுந்தர்.சி. தற்போது மீண்டும் பேய் + காமெடி கூட்டணியில் 'அரண்மனை' படத்தின் இரண்டாம் பாகத்தை திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை குஷ்பு தயாரிக்க இருக்கிறார். சித்தார்த் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
இச்செய்தியினை தனது பிறந்த நாளன்று ட்விட்டர் தளத்தில் பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.