Last Updated : 27 May, 2014 11:50 AM

 

Published : 27 May 2014 11:50 AM
Last Updated : 27 May 2014 11:50 AM

மீண்டும் தொடங்கப்பட்ட இது நம்ம ஆளு படப்பிடிப்பு

படம் கைவிடப்பட்டது என்று தகவல் பரவி வந்த நிலையில், 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பு 25ம் தேதி முதல் சென்னையில் தொடங்கியது.

சிம்பு, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்க, பாண்டிராஜ் இயக்கி வரும் படம் 'இது நம்ம ஆளு'. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிம்புவே தயாரித்து வருகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார்.

சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு, திடீரென நிறுத்தப்பட்டது. சிம்பு - நயன் இணைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.

இந்நிலையில், மீண்டும் 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சிம்பு - நயன் இருவருமே இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் தளத்தில் உறுதி செய்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி படத்தின் டப்பிங் பணிகள், புதன்கிழமை முதல் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x