ஜீவா நடிக்கும் புதிய படம் கவலை வேண்டாம்

ஜீவா நடிக்கும் புதிய படம் கவலை வேண்டாம்
Updated on
1 min read

'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டி கே தன் அடுத்த படத்திற்கு 'கவலை வேண்டாம்' என டைட்டில் வைத்திருக்கிறார். ஜீவா இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில், ஜீவா, துளசி, நாசர் 'யான்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், 'யான்' படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் 'கவலை வேண்டாம்' படத்தையும் தயாரிக்கிறார்.

'விண்ணைத்தாண்டி வருவாயா', ‘கோ', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'யாமிருக்க பயமே' ஆகிய படங்களை ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை கலந்த காதல் படமாக 'கவலை வேண்டாம்' திரைப்படம் உருவாக இருக்கிறது. இதில் பாபி சிம்ஹா கௌரவ வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின், தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர் - நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

'கவலை வேண்டாம்' படத்தைத் தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படம், 'அம்பாசமுத்திரம் அம்பானி' இயக்குநர் ராம்நாத் இயக்கும் புதிய படம் என மொத்தம் மூன்று படங்களில் ஜீவா நடிக்க இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in