Last Updated : 06 Jan, 2015 12:49 PM

 

Published : 06 Jan 2015 12:49 PM
Last Updated : 06 Jan 2015 12:49 PM

ஏப்ரல் 2-ல் நண்பேன்டா ரிலீஸ்

உதயநிதி - நயன்தாரா நடித்துள்ள 'நண்பேன்டா' திரைப்படம் ஏப்ரல் 2-ல் வெளியாகிறது.

உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'நண்பேன்டா'. கருணாகரன், சூஸன், மனோபாலா, ஷெரீன், பட்டிமன்றம் ராஜா, லொள்ளுசபா மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் ' நண்பேன்டா ' படத்தை இயக்கியுள்ளார். இவர் எம்.ராஜேஷிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சமீபத்தில் 'நண்பேண்டா' படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில்,' நண்பேண்டா' படத்தை உலகம் முழுவதும் ஏப்ரல் 2-ல் ரிலீஸ் செய்வதாக உதயநிதி தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2-ல் படம் ரிலீஸ் என்றாலும், இப்போதே தியேட்டர்களை புக் செய்யும் வேலையில் உதயநிதி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x