Last Updated : 20 Aug, 2017 03:01 PM

 

Published : 20 Aug 2017 03:01 PM
Last Updated : 20 Aug 2017 03:01 PM

மீண்டும் தள்ளிப் போகிறதா 2.0 வெளியீடு? - லைக்கா நிறுவனம் மறுப்பு

ஜனவரி 25-ம் தேதி வெளியீட்டிலிருந்து '2.0' வெளியீடு தள்ளிப் போகிறது என்று வெளியான தகவலை லைக்கா நிறுவனம் மறுத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்பதால், கிராபிக்ஸ் பணிகள் பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 25, 2018-ல் வெளியீடு என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், '2.0' கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய இன்னும் அதிக நேரமாவதால், கோடை விடுமுறை வெளியீட்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகின.

இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து விசாரித்த போது, "கிராபிக்ஸ் காட்சிகள் தாமதமாவதால் தான் தீபாவளி வெளியீட்டிலிருந்து ஜனவரி வெளியீட்டுக்கு மாற்றினோம். ஜனவரி 25 வெளியீட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிடும்" என்று தெரிவித்தார்கள்.

மேலும் இறுதிப்பாடல் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளது. 12 நாட்கள் நடைபெறவுள்ள இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x