ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் குஷ்பு

ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார் குஷ்பு
Updated on
1 min read

ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்த குஷ்பு, அதிலிருந்து விலகியுள்ளார்.

தமிழ் திரையுலகினர் பலரும் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கி, அதில் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னணி திரையுலகினரில் குஷ்பு மட்டுமே, தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் இயங்கி வந்தார். தன்னைப் பற்றி எந்தவொரு செய்தி வந்தாலும் சரி, ஒரு செய்திக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்றாலும் ட்விட்டர் பக்கத்திலேயே செய்து வந்தார்.

இந்நிலையில், தற்போது ட்விட்டர் பக்கத்திலிருந்து விலகியுள்ளார் குஷ்பு. ”நண்பர்களே குட்பை! வலைத்தள மேடையை தேசத்தை வளர்க்கப் பயன்படுத்துங்கள் பிரிப்பதற்காக வேண்டாம். வெறுப்பையும் பழிதீர்ப்பதையும் விட்டு விடுங்கள், அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் இவற்றைப் பரப்புங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதியாக ட்வீட் செய்துள்ளார் குஷ்பு.

மேலும், எப்போதுமே ட்விட்டர் தளத்துக்கு அடிமையாகிவிட்டது போல் தொடர்ச்சியாக செயலாற்றி வந்ததால் மட்டுமே விலகியுள்ளார் என்றும், வேறு எந்தவொரு தனிப்பட்ட காரணமுமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் பக்கத்திலிருந்து தனது கணக்கை குஷ்பு நீக்கவில்லை. ஆகையால், விரைவில் ட்விட்டர் பக்கத்துக்கு திரும்புவார் என்றும் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in