

‘இரண்டாம் உலகம்’ படத்தின் மலேசியா, சிங்கப்பூர் விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.
ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. இப்படம் நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக படத்தினை வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.
தமிழ்ப் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனைப் புரிந்துக் கொண்ட ஆர்யா, 'இரண்டாம் உலகம்' படத்தின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஏரியா உரிமைகளை வாங்கியிருக்கிறார்.
ஆர்யா நடிப்பில் 'ராஜா ராணி', ‘ஆரம்பம்’ ஆகிய வரவேற்பை பெற்ற படங்களைத் தொடர்ந்து 'இரண்டாம் உலகம்' படம் வெளியாவதால், இப்படம் கண்டிப்பாக வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஆர்யா.