Last Updated : 12 Jul, 2016 05:46 PM

 

Published : 12 Jul 2016 05:46 PM
Last Updated : 12 Jul 2016 05:46 PM

தீவிர நடிப்பு பயிற்சியில் நடிகை ஜோதிகா

பிரம்மா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்காக தீவிர நடிப்புப் பயிற்சியில் ஜோதிகா ஈடுபட்டு வருகிறார்.

பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக 'குற்றம் கடிதல்' உள்ளதால் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வென்றது.

தற்போது, இயக்குநர் பிரம்மா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் பெண்களுக்கான பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இப்படத்தின் பிரதான வேடத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. முதற்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் ஜோதிகா மற்றும் அவரோடு நடிக்கும் படக்குழுவினருக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வருகிறார் பிரம்மா. இப்பயிற்சி தொடர்ச்சியாக 20 நாட்கள் நடைபெற இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில், படம் குறித்த முறையான அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. '36 வயதினிலே' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜோதிகா இக்கதையைத் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x