Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

சிவாஜி சிலையை அகற்றக் கோரும் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றக் கோரும் வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை சாலையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. அங்கிருந்து சிலையை அகற்றக் கோரி பி.என்.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மறைவுக்குப் பின் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.நாகராஜன் என்பவர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்து சிலையை வேறு இடத்துக்கு மாற்றலாம் என போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சிவாஜி சிலையை அங்கிருந்து அகற்றக் கூடாது என கோரி சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன், தமிழ்ச் சங்கப் பலகை தலைவர் தஞ்சை தமிழ்ப்பித்தன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்னிலையில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x