

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு சென்னை மீண்டு வரும் நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இதுபற்றிய ‘பீப்’ பாடல் ஒன்றை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, அதனால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு பார்த்திபன் நிவாரண உதவிகளை வழங்கினார். தற்போது சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபன், ‘த்துதா மிகித லகுதா’ என்ற பீப் பாடல் ஒன்றை எழுதி யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
‘யாதும் ஊரே..’ நிகழ்ச்சியில் இப்பாடல் குறித்து பார்த்திபனிடம் கேட்ட போது, “ஒரு சராசரி மனித னாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய் தேன். ஒரு வீட்டில் துக்கம் நடந்தால் கூட, அத் துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரி யம் ஒன்றை நடத்துவார்கள். அதேபோல் சென்னையும் மீண் டும் பழைய நிலைமைக்கு வரலாமே என்று ஒரு பாடல் பண்ணலாம் என தோன்றியது. அப்பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘பீப்’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப் பாடலை ‘பீ பீ’ என்று தொடங்குவது போல எழுதினேன்.
இப்பாடலில் வெள்ள பாதிப் பின்போது உதவிய தன்னார் வலர்களைத்தான் ஆடவைத்தேன். அவர்களோடு சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற் றுள்ளனர். துயரப்பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகை களை அறிமுகப்படுத்தி இருக்கி றேன். மக்களிடையே இருக்கும் மனிதநேயத்தை வெளியே காட்ட வேண்டும் என்பதுதான் இப்பாடலின் நோக்கமாகும்.
‘Me & Youtube’ என்ற பெயரில் யு-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் இப்பாடலை பதிவேற்றி இருக்கிறேன். இதேபோன்ற பல விஷயங்களை அந்த சேனலில் தொடர்ச்சியாக பதிவேற்ற முடிவு செய்திருக்கிறேன்.
‘தி இந்து’, ‘அகரம்’, மற்றும் ‘புதிய தலைமுறை' இணைந்து நடத்தும் 'யாதும் ஊரே..' கருத் தரங்கில் கூட நம்முடைய பங்கு இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக பங்கேற்றுள் ளனர். இது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது” என்றார்.