மார்ச்சில் தொடங்குகிறது கமலின் உத்தம வில்லன் படப்பிடிப்பு

மார்ச்சில் தொடங்குகிறது கமலின் உத்தம வில்லன் படப்பிடிப்பு
Updated on
1 min read

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல் அடுத்து நடிக்கவிருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் நடந்து வரும் சமயத்தில், தனது அடுத்த படமான 'உத்தம வில்லன்' படத்திற்கான கதை, திரைக்கதை இரண்டையும் எழுதி முடித்துவிட்டார் கமல்.

கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கிரேஸி மோகன் மூவருமே 'உத்தம வில்லன்' பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ரமேஷ் அரவிந்த் படத்தினை இயக்கவிருக்கிறார். கிரேஸி மோகன் படத்தின் வசனங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றி வருகிறார். இசைப்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'விஸ்வரூபம் 2' படத்தின் பின்னணி இசையையும் ஜிப்ரான் தான் செய்து வருகிறார்.

இப்படத்தில் கமலுடன் பாலசந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் கமலுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கமலுடன் நடிக்க அவரின் மகளான ஸ்ருதிஹாசனிடம் கேட்டு இருக்கிறார்கள், ஆனால் அவரோ தேதிகள் இல்லை என்று கூறிவிட்டாராம். இப்படத்தில் கமல் மூத்த, சினிமா சூப்பர் ஸ்டார் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச்சில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை முடிந்தவுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in