Last Updated : 17 Mar, 2014 12:53 PM

 

Published : 17 Mar 2014 12:53 PM
Last Updated : 17 Mar 2014 12:53 PM

நண்பனையும் தம்பியையும் இணைக்கும் விஷ்ணுவர்தன்

நண்பன் ஆர்யாவைவும், தம்பி கிருஷ்ணாவையும் வைத்து தனது அடுத்த படத்தினை இயக்கி, தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன்.

'ஆரம்பம்' படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் யாரை வைத்து படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

'ஆரம்பம்' இந்தி ரீமேக் இயக்கவிருக்கிறார், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அஜித் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கி தயாரிக்க இருக்கிறார் என்று செய்திகள் உலவின.

இது குறித்து விசாரித்ததில், "விஷ்ணுவர்தன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதற்கு விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் என்று பெயரிட்டு இருக்கிறார். ஆனால், அஜித் நடிக்கவிருக்கும் படத்தினை அவர் தயாரிக்கவில்லை.

அவருக்கு நெருங்கிய நண்பரான ஆர்யாவையும், தம்பி கிருஷ்ணாவையும் இணைத்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தினை தற்போதே முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கிவிட்டது." என்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x